இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

ஐ திரைப்படம் பெண்களை இழிவு படுத்துகிறதா ?

ஐ திரைபடத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரிதுள்ளதாக சங்கருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே. சங்கர் போன்ற ஒரு பெரிய அனுபவம் வாய்ந்த இயக்குனரிடம் இதை யாரும் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை அதனால் தான் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பாய்ஸ் திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் ஒற்றை வரியில் எழுதிய சீ ! என்ற விமர்சனத்தை யாரும் மறந்து விட முடியாது . சங்கரும் பாய்ஸ் திரைப்படம் தவிர மற்ற படங்களில்  சமூக அக்கறையுள்ள கதாநாயக பாத்திரம் கொண்ட திரைபடங்களை பெரும்பாலும் கொடுத்து வந்திருக்கிறார் .

ஆனால் ஐ திரைப்படம் திருநங்கைகளை வெளிபடையாக கேலி செய்வது போன்ற காட்சிகளை வைத்தது மற்றுமன்றி பெண்களையும் மறை முகமாக காட்சிப் பொருளாக கட்டுகின்றார்.


ஏற்கெனவே தமிழ் படங்களில் பெண்களை கவர்ச்சி பதுமைகளாக காண்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் அனால் சங்கர்  ஒரு படி மேலே சென்று "மெருசலாயிட்டேன்" பாடலில் கதாநாயகியை கை பேசி (mobile) ஆகவும் இரு சக்கர வாகனமாகவும் (மோட்டார் பைக்) தொலைகாட்சி பெட்டியாகவும் உருமாற செய்து , ஆண்கள் பயன்படுத்தும் பொருட்களிலே ஒன்றாக பெண்களை காட்சி  படுத்தி  இருக்கிறார்  சங்கர்.

பெரியார்  வாழ்ந்த  இந்த சமூகமும் இதனை சகித்துக் கொண்டிருக்கிறது !
ஐ திரைப்படத்தை தொழில்நுட்பத்தில் சிறந்த படைப்பாக கொடுத்திருக்கிற சங்கர். மனிதாபிமானம் சிறிதுமற்ற படைப்பாக கொடுதிருகிரார்.
நமது நாட்டில் நஞ்சைக் கூட அதன் தன்மை தெரியாத வாறு தேன் தடவி தந்தால் , நஞ்சென்று அறியாது வாங்கிப்பருகி களித்திருப்போம் நாம்.

  மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை  திருத்துவோம் வாரீர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக