இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

6-0 சாதனையை தக்க வைத்த இந்தியா!



உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  பாக்கிற்கு எதிராக  இது வரையில் தோர்தது இல்லை என்ற சாதனையை மீண்டும் ஒரு முறை தக்க வைத்துக் கொண்டுள்ளது இந்திய அணி . 



கடந்த 4 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணி பெற்றுள்ள (பயிற்சி ஆட்டம் தவிர்த்து ) முதல் வெற்றி இது! உண்மைய சொல்லனுனா நேத்து வரைக்கும் இந்தியா பாக்கிற்கு எதிராக வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது . ஆனால் இன்று ஆட்டத்தின் டாஸ் முதல் கடைசி வரை அசத்தலாக ஆடி அசத்தியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி .

இந்தியா கடந்த 6 முறை பாக்கிற்கு எதிராக பெற்றுள்ள போட்டிகளின் சுருக்கத்தை பின்வரும் படத்தில் காணாலாம் .




 நல்லதொரு துவக்கம் 

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கி உள்ளதன் மூலம் 2015  உலகக் கோப்பையில்  நல்லதொரு துவக்கமாக அமைந்துள்ளது. 

இந்தப் போட்டியின் சுப்பர் அம்சங்கள் 

  • விராட் கோஹ்லி சதமடித்து மீண்டும் நல்ல பார்மிற்கு திரும்பிருப்பது நமது இந்திய அணிக்கு அணி வரும் போட்டிகளில் புது தெம்பைக் கண்டிப்பாக தரும்.
  • கடந்த பல மாதங்களாக சொதப்பி வந்த ஷிகர் தவான் மீண்டும் தனது அதிரடி ஆட்டப் பாணிக்கு திரும்பயுள்ளது இன்னொரு சாதகமான அம்சம் 
  • சுரேஷ் ரைனா இதுவரை ஆஸ்திரேலியா போன்ற வேகப் பந்திற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்போதுமே சொதப்புவார் என்ற தனக்கு எதிரான குற்றசாட்டிற்கு தனது பொறுப்பான வேகமான ஆட்டத்தின் மூலம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் .
  • நம்ம ஊரு அஷ்வின் இன்றையப் போட்டியில் 3 மெய்டன் ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை எடுத்து அசத்தி அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.

இன்றைய போட்டியின் சொதப்பல்கள் 

  • இந்தியா பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து கோட்டை விட்டது 
  • நமது கேப்டன் தோணி இன்னும் பார்மிற்கு ஏமாற்றமே 
மேலும் பல வெற்றி பெற்று உலகக் கோப்பையை தக்க வைக்க இந்திய அணியினை வாழ்த்துவோம் !



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக