இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஐ - சூப்பரா சொதப்பலா - விஜய் டிவி நீயா நானா விவாதம்

ஐ - சூப்பரா சொதப்பலா - விஜய் டிவி நீயா நானா கற்பனை  விவாதம் 

Disclaimer 

இந்த பதிவு ஒரு கற்பனையான முயற்சி மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப் பட்டதல்ல.

கோபிநாத் அவர்கள் வழக்கம் போல நிகழ்ச்சியை ஆரம்பித்தார் , ஆச்சி மசாலா வழங்கும் நீயா நானா ! நிகழ்ச்சியின் இந்த வார விவாதம் ,ஐ - சூப்பரா சொதப்பலா , இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐ படத்தின் இயக்குனர் சங்கர் அவர்களே வந்துள்ளார் அவரை வரவேற்று விவாதத்தை துவக்கலாம் வாருங்கள்.  


முதல்ல சொதப்பலேனு சொல்ற இந்தப் பக்கம் சொல்லுங்க படத்துல என்ன சொதப்பல கண்டீங்க ? உடனே நான் மைக்கை வாங்கி படத்தோட திரைக்கதேயே பெரிய சொதப்பல்தான் அப்படினு சொன்னதும் சங்கர் சார் ரொம்ப கோபமாகி திரைக்கதைனா என்னானு தெரியுமா ஒனக்கு . ஏதோ  இலவசமா ப்ளாக் கிடைகிறதால விமர்சனம் என்கிற பேர்ல  எதைப் பத்தியும் தெரியாம கண்டதையும் எழுதீரிங்க , வந்து ஒரு நாள் சூட்டிங் பாருங்க எங்களோட வலி என்னான்னு ஒங்களுக்கு தெரியும் அப்படினு சொல்லிட்டு மேலும்  தொடர்ந்தார், என்னோட திரைகதை சொதபல்னா நீ இயக்குனரா இருந்தா படத்தோட திரைக்கதையை எப்படி வச்சிருப்பனு   சொல்லு பாக்கலாம் அப்படின்னு முதல்வன் பட பாணியில் சவால் விட்டார்.

ஐ எனது கற்பனை  திரைக்கதை  சுருக்கம் 




 தமிழகத்தின் பெரிய மடலான ஹீரோ  விக்ரம்மை     மூணு மாசமா  காணவில்லை மேலும் அவரைப் பற்றிய எந்த தகவலும்  கிடைக்கல, விக்ரமின் வருங்கால காதல் மனைவி ரொம்ப வருத்தத்தோட இருக்குறாங்க அப்ப அங்க எமியோட குடும்ப டாக்டர் பரபரப்பா வந்து   இன்னிக்கி நடந்த ஒரு கார் விபத்தில் ஹீரோ மரண மடைந்த செய்தியை சொல்லுறாரு, அதிர்ச்சியான ஹீரோயின்  மயங்கி விழுந்துர்றாங்க . ஹீரோயின் மயக்கம் தெளிந்து எழும்போது ஹீரோவும் அவங்களும் கல்யாணத்துக்கு அப்புறமா வாழ்றதுக்கு கட்டி வச்ச புது மாளிகைலஅவங்க அம்மா மற்றும் டாக்டரோட  இருங்காங்க , ஹீரோயின் அம்மா ஹீரோவோட இறுதி சடங்கு முடிஞ்சதாகவும் ஹீரோயின் மனதை தேத்திக்க சொல்லி ஆறுதல் சொல்றாங்க ஆனா ஹீரோயினோட மனது மட்டும் இன்னும் ஹீரோ செத்தத நம்ப மறுக்கிறது . ஹீரோயின் ரூமுக்குள் சென்றதும் அவங்க அம்மா டாக்டர்கிட்ட ரொம்ப வருத்தப் படுறாங்க, அந்த டாக்டர் அவங்க கிட்ட கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடுனு ஆறுதல் சொல்லிட்டு போயிடுறாரு.

ஹீரோயினோட மனச மாத்துறதுக்காக ஒரு மனநல மருத்துவர ஹீரோயின் குடும்ப டாக்டர் ஹீரோயின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாரு . மன நல மருத்துவர்கிட்ட தங்களது  காதல் வாழ்க்கைய பிளாஷ் பேக்குல ஹீரோயின் சொல்லுறாங்க இதற்க்கு இடையில் ஹீரோ எதிரிகள் ஒவ்வொருத்தரா கொலை செய்யிராரு .

மனநல மருத்துவரின் கவனிப்பில் ஹீரோயின்   கொஞ்ச கொஞ்சமா நல்ல நிலைக்கு திரும்பிட்டு இருக்காங்க , அப்போ தற்செயலா குடும்ப டாக்டரும் மனநல மருத்துவரும் பேசுவதை தற்செயலா ஹீரோயின் கேட்க நேரிடுது , டாக்டர்கள் பேசுறதில இருந்து ஹீரோ இன்னும் சாகலங்கறதும் மேலும் அவரோட விகார நிலைமைக்கு தனது குடும்ப டாக்டரும் மற்ற 5 பேரும் காரணங்கிரத தெருஞ்சுகிறாங்க . ஒடனே டாக்டர்கிட்ட போயி சண்ட போடுறாங்க அப்பதான் ஹீரோயினுக்கு தெரியுது அவங்க ஹவுஸ் அர்ரெஸ்ட்ல இருக்குறது. 

இதற்கிடையில் ஹீரோ  டாக்டர் தவிர மற்ற வில்லன்களை பழிவாங்கிடுறார். குடும்ப டாக்டர் ஹீரோயின அவங்க அம்மா உயிரோட இருக்கனுனா என்னைய  கல்யாணம் பண்ணனும்னு   மிரட்டிசம்மதிக்க வைக்கிறார் ,ஹீரோ  குடும்ப டாக்டர பழிவாங்க வரும்போது அவர்கிட்ட ஹீரோயின் தான் கிட்ட இருக்குறத சொல்லி ஹீரோவ மிரட்டி சிறைபிடிகிறார். 

 எப்படி தனது காதலிய காப்பாத்தி டாக்டர  பழிவாங்குறார் அப்படிங்கறத கிளைமாக்ஸ்ல காண்பிக்கிறோம் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக