இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2009

சிகரம் - பகுதி 1

வெற்றியும் தோல்வியும் வாழ்கையில் இணைபிரியாதவை , இதில் தோல்வி பல மனிதர்களை துவண்டு விழ செய்கின்றது . தொடர் தோல்விதனை எப்படி ஏணிப் படிகளாக்குவது என்பதை தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு சிகரம் தொட்டவர்களைக் கொண்டு விளக்கும் தொடர் இது .
உலக பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் அனைவர் மனதிலும் நம்பிக்கை எனும் விதையை விதைத்திட ஒரு சிறு முயற்ச்சி,

ஜெ கே ரோவ்லிங்
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் நூலின் ஆசிரியை ஜெ கே ரோவ்லிங் அவர்களின் சிகரம் தொட்ட கதை .

1993 ஆண்டு டிசம்பர் மாதம் உலகே கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிய நேரம்
ரோவ்லிங் மட்டும் சோகத்தில் ,சென்ற மாதத்தில்தான் விவாகரதுப்பெற்று தனது மகளுடன் ஸ்காட்லாந்து எடின்பரோ நகரில் தஞ்சமடைந்திருந்தார் ரோவ்லிங்.

தன்னையும் தனது மகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்கு செல்ல வேண்டிய கட்டயத்திலே ரோவ்லிங், தனக்கு தெரிந்த அச்சிரியப்பணிக்கு செல்ல கூட கல்விச்சான்றிதல் இல்லை எதிர்காலம் கேள்விக்குறியாக ரோவ்லிங் முன்பு நின்றது. இந்த சோதனையை சாதனையாக்க அவரிடம் இருந்தது அவருடைய சிந்தனை , ஆம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது மனக்கண்ணில் கண்ட ஹாரி பாட்டர் கதையின் துவக்கமாக ஆனது.

தனது சிறுகுழந்தையை பூங்காவிற்கு அழைத்து சென்று தூங்கவைத்து தனது புத்தகத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் ரோவ்லிங் நோட்டில் எழுதிய கதைக்கு தனது வீட்டில் இருந்த பழைய டைப் ரைட்டிங் மெஷின் மூலம் எழுத்து வடிவம் கொடுத்தார் , அருகில் இருந்த கல்லூரியின் உதவியால் முழூ வடிவம் பெற்றது ஹாரி பாட்டர் முதலாம் பாகம் . இப்போது புத்தகத்தை விற்க வேண்டிய சோதனை ரோவ்லிங் முன்னால் . தனது தொடர் உழைப்பினால் 1 ஆண்டிற்கு பிறகு Bloomsbury என்ற நிறுவனம் சுமார் $4,000 விலைக்கு அந்த புத்தகத்தை வாங்கியது . அந்த புத்தகம் மக்கள் மத்தியிலே சிறுக சிறுக பிரபலம் அடைந்தது .

பள்ளியில் ஆசிரியப்பணி செய்து கொண்டே அடுத்த பாகத்தை ( Harry Potter and the Chamber of Secrets) , எழுதினார் இந்தப்புத்தகம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெரிய வரவேற்ப்பை பெற்று ஜெ கே ரோவ்லிங் உலகப் புகழ் பெற அடிகோலியது .

ஹாரி பாட்டர் தொடரின் நான்காம் பாகம் (HarryPotter and the Goblet of Fire) வரலாற்றில் மிக விரைவில் விற்று தீர்ந்தது . இப்புத்தகம் முதல் பதிப்பில் சுமார் 5.3 மில்லியன் வெளியானது , மேலும் சுமார் 1.8 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யபட்டிருந்தது . அடுத்தடுத்து வந்த எல்லா பாகங்களும் முந்தைய சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்தது .

2006 ஆண்டு இறுதியிலே ஹாரி பாட்டர் தொடரின் 6 பாகங்கள் சுமார் 90 மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்து உலக பெரும் பணக்காரர்களின் வரிசையில் ஜெ கே ரோவ்லிங்கை இடம் பெற செய்தது .

தனது சோகங்களை சாதிப்பதற்கு உரமாக்கிய இம்மங்கையின் மன உறுதி நமக்குமிருந்தால் சிகரம் கூட தொட்டுவிடும் தூரத்திலே !.

செவ்வாய், 26 மே, 2009

இரண்டாம் உலகப்போர் அரிய புகைப்படங்கள் பகுதி 2 - exclusive

உலகப்போர் அரிய புகைப்படங்கள் பகுதி 2
பகுதி 1 கிடைத்த நல்லாதரவை தொடர்ந்து அடுத்த பகுதி உங்களுக்காக

சேதமடைந்த கட்டடங்கள்
ஒரு படையினரின் பயணம்
உணவிற்கு திண்டாட்டம்
சேதமடைந்த போர் விமானம்
களைப்பாறும் போர் வீரர்கள்
ஒரு படையினரின் நடை பயணம் ஒரு படையினரின் பயணம்














புதன், 20 மே, 2009

இமயத்தில் இரு நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இரண்டாம் உலகப்போர் அரிய புகைப்படங்கள் - exclusive

இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு










திங்கள், 18 மே, 2009

நிலையான இந்திய அரசு, சரியான மக்கள் தீர்ப்பு

உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இந்திய மக்கள் நிலையான அரசினை தேர்வு செய்து சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பினை உண்டாக்கி வரும் இச்சூழலில் நிலையான ஒரு அரசு நமக்கு கண்டிப்பாக தேவை.

பாஜகவின் பரிதாப நிலை

வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் பிரதம வேட்பாளர்களாக இல்லாததும் அத்வானி, மோடி இடையே நடந்த அதிகாரத்திற்கான போட்டி தமிழகம், ஆந்திர போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி இல்லாமை போன்றவையே பாஜகவின் தோல்விக்கு காரணங்கள்.

தமிழக மக்களின் சிறந்த தெரிவு

கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழகம், ஆந்திர முடிவுகள் மத்திய அரசினை முடிவு செய்யும் விதமாக இருந்தது மேலும் உபி, கேரளம் மற்றும் மேற்கு வாங்க மாநில முடிவுகள் காங்கிரசை பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தியுள்ளது.

இலங்கை பிரச்சனை

அதிமுக கூட்டணி இலங்கை பிரச்சனையை பிரதானமாக கையாண்டது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்கள் பற்றி இம்மியளவும் எண்ணிப்பார்க்காத அதிமுக தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க எனக்கு ஓட்டு போடுங்கள் என்றது அவர்கள் சிறந்த நடிகை என்பதை மக்களிடம் காட்டியது, யோசித்து பாருங்கள் வலையுலக நண்பர்களே வைகோ எதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்? இலங்கை தமிழர்கள் பற்றி பேசி தானே,ஆக இவர்கள் ஓட்டு வாங்க சொன்ன பொய் அவர்களுக்கே எதிராக முடிந்தது. விலைவாசி உயர்வு, மின்தடை போன்ற முக்கிய பிரச்சனைகளை நாயகர்கள் ஆக்கியிருந்தால் வெற்றி பெற உதவி இருக்கும்.

மண்ணை கவ்விய மதிமுக பாமக

சேது சமுத்திர திட்டத்தினை தமிழகத்திற்கு பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திமுக அணியிலிருந்து 2004 ஓட்டு கேட்ட வைகோ 2009 தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தினை செய்யல்படுத்தாது தடுக்கும் தலைவியின் பின்னால். சென்ற சட்டமன்ற தேர்தலிலே எடுபடாத குடும்ப அரசியல் என்ற வாதம்,சென்ற சட்டமன்ற தேர்தலிலே பாமகவைவிட குறைந்த இடங்களே தந்ததால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோ இம்முறை தன்மானத்தை தானை தலைவியிடம் அடகு வைத்து விட்டாரா? வைகோவை தோற்கடித்துள்ளனர் தமிழக மக்கள்.

ஒரு சதவிகித வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி பதவி சுகம் கண்டு வந்த நரியின் சாயத்தை வெளுக்க வைத்த தமிழக மக்கள் வாழ்க.இனியாவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் பாமக போன்றவர்களை புறந்தள்ள வேண்டும்.

வளர்ந்துவரும் தேமுதிக

2004 சட்டமன்ற தேர்தலிலே 8.5% இந்த தேர்தலிலே 10% வாக்குகளை தனித்து நின்று தமிழக நின்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது தேமுதிக.


மொத்தத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை எங்களின் இதயத்தை துளைத்தாலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இதயம் கனத்தாலும் இந்தியாவிற்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு வக்களித்திட எம் தமிழக மக்கள் சிறந்த மதிநுட்பம் கொண்டோர் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர்


பராசக்தி

வெள்ளி, 8 மே, 2009

கத்திரி வெயிலில் குளுமை

நம்ம சென்னைல கத்திரி வெயில் தங்க முடியல . இத ஒன்னும் பண்ண முடியாது கண்ணுக்கு குளுர்ச்சியா படத்தையாவது வாங்க பார்ப்போம்







வியாழன், 7 மே, 2009

இக்கால மனிதனின் குகை

ஆதி மனிதனைப்போல் குகையில் வசிக்க ஆசையா உள்ளே வாருங்கள்








பரிட்ச்சைக்கு தயாரா?

பரிட்ச்சைக்கு தயாரா?

நம்மில் பலர் பள்ளி காலங்களில் பரிட்ச்சைக்கு தயாராகமல் சென்று எதையோ எழுதி சமாளிப்பது உண்டு அப்படி சில உங்கள் பார்வைக்கு







செவ்வாய், 5 மே, 2009

"பசங்க" தரமான தமிழ் திரைப்படம்


பசங்க படம் எனது பள்ளி கால நினைவுகளை தட்டி எழுப்பியது நீங்கள் தமிழ் வழி கல்வி பயின்றவர் எணில் நிச்சயமாக உங்களது பள்ளி கால நினைவுகளுக்கு செல்ல போவது நிச்சயம்.

சராசரி குடும்பங்களில் நடக்கும் தாய் தந்தை சண்டையின் வலி குழைந்தைகளை எப்படி பாதிக்கும் என இத்திரைபடத்தின் மூலம் உணர்த்திய விதம் அருமை.பருத்திவீரன் சுப்ரமணியபுரம் போன்ற கொண்டாடப்பட்ட படங்களில் கூட வன்முறை அதிகமாக இருந்தது இத்திரைப்படம் இத்தகைய குறைகள் கூட இல்லாத நல்ல திரைப்படம்.படத்தின் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!



சிறுவருக்கான படமென்று ஒதுக்காமல் சென்றால் உங்களை கவரப்போவது உறுதி.

பசங்க படம் தனது வெற்றியின் மூலம் தல தளபதிகளை கலங்கடிக்க போவது மட்டும் உறுதி

ஆண் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்

ஆண் குழந்தைகள்

அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அய்யன்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆழ்வார்
ஆற்றலரசு
ஆறுமுகம்
ஆனைமுகன்
இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இராவணன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமுருகன்
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளமுருகன்
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறைவன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்
ஈழவன்
ஈழவேந்தன்
உதியஞ்சேரல்
எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி
ஒட்டக்கூத்தன்
ஓரி
கண்ணன்
கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமரன்
குமரவேள்
குமாரவேல்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி
சாத்தன்
சாத்தனார்
சிலம்பரசன்
சிவன்
சிவனடியான்
சிற்றம்பலம்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தூர்முருகன்
செந்தில்நாதன்
செந்தில்வேலன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செல்லையா
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்

தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணி;சேரன்
தணிகைமுருகன்
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தணிகைவேலன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாவேலன்
திருமாறன்
திருமுருகன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்சிவன்
தில்லைச்செல்வன்
தில்லையம்பலம்
தில்லைவில்லாளன்
துரைமுருகன்
தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்

நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்

நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாகநாதர்
நாகநாதன்
நாகனார்
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நாவேந்தன்
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பழனி
பழனியப்பன்
பழனிவேல்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூதப்பாண்டியன்
பூதன்தேவனார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருமாள்
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்


மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்கருப்பன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகப்பன்
முருகன்
முருகவேல்
முருகவேள்
முருகு
முருகையன்
முருகவேல்
முருகவேள்
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேலன்
வடிவேற்கரசன்
வடிவேல்முருகன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவர்;கோன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்

வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகன்
வேல்முருகு
வேலன்
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து

பெண் குழந்தைகளுக்கு வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்

பெண் குழந்தைகள்

அங்கயற்கண்ணி
அஞ்சலை
அங்கவை
அவ்வை
அவ்வையார்
அம்மை
அம்மையார்
அம்மைச்சி
அரசி
அரசியார்
அரிவை
அருவி
அருள்நங்கை
அருள்மங்கை
அருள்மொழி
அருளம்மை
அருளரசி
அருட்செல்வி
அல்லி
அல்லியரசி
அலர்மேல்மங்கை
அலைமகள்
அழகம்மை
அழகம்மா
அழகரசி
அழகி
அறிவு
அறிவரசி
அன்பரசி
அன்பழகி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்
ஆண்டாள்
ஆட்டநத்தி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்செல்வி
இசை
இசைச்செல்வி
இசையரசி
இசைவாணி
இளநிலா
இளமதி
இளவழகி
இளவரசி
இளவேணி

இளவேனில்
இன்பவல்லி
இனியவள்
இனியாள்
ஈழச்செல்வி
உமை
உமையம்மை
உமையரசி
உமையாள்
உலகம்மை
எழிலரசி
எழினி
எழில்
எழில்மங்கை
எழிலி
எழில்விழி
ஏழிசை
ஏழிசைச்செல்வி
ஏழிசைவல்லி
ஒளவை
ஓவியம்
ஓவியா

கண்ணகி
கண்ணம்மா
கண்மணி
கதிர்ச்செல்வி
கயல்விழி
கலைச்செல்வி
கலைமகள்
கலைமதி
கலையரசி
கலையழகி
கலைவாணி
கலைவிழி
கனிமொழி
காமவல்லி
காவிரி
கிளி
கிளிமொழி
குயிலி
குயிலினி
குரவை
குமரி
குமாரி
குணமாலை
குந்தவி
குந்தவை
குலக்கொடி
குலமகள்
குலப்பாவை
குழலி
குறமகள்

குறிஞ்சி
குறிஞ்சிமலர்
கொற்றவை
கொற்றவைச்செல்வி
கோதை
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமளம்
கோமளவல்லி
கோலமயில்
சுடர்
சுடர்க்கொடி
சுடரொளி
சுடர்விழி
செங்கமலம்
செந்தமிழ்
செந்தாமரை
செந்தினி
செம்பருத்தி
செண்பகம்
செல்லம்
செல்லக்கிளி
செல்வி
செவ்வந்தி
சேரன்மாதேவி
சேல்விழி
சூடாமணி
சோழன்மாதேவி
தங்கம்
தங்கம்மா
தணிகைச்செல்வி
தமிழ்
தமிழ்த்தென்றல்
தமிழ்நங்கை
தமிழ்மகள்
தமிழ்வாணி
தமிழ்ச்செல்வி
தமிழரசி
தமிழழகி
தமிழிசை
தமிழினி
தாமரை
தாமரை
தாமரைச்செல்வி
தாயம்மா
திருமகள்
திருமங்கை
திருமலர்
திருமொழி
திருப்பாவை
திருச்செல்வி
திருவாட்டி
தில்லை
தென்றல்
தேன்மொழி
துளசி
நங்கை
நடவரசி
நப்பசலையார்
நல்லிசை
நன்முத்து
நன்மொழி
நாச்சியார்
நாகம்மை
நாமகள்
நாவரசி
நிறைமதி
நிலமகள்
நிலா
நிலாவரசி
நிலாவழகி
பதுமை
பவளம்
பாவரசி
பாவை
பாரதி
பாரிமகள்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கோதை
பூதநாச்சியார்
பூம்பாவை
பூமகள்
பூமணி
பூமலர்
பூவரசி
பூவிழி
பூவை
பெண்ணரசி
பேரழகி
பொற்கொடி
பொற்செல்வி
பொற்பாவை
பொன்நகை
பொன்மகள்
பொன்மணி
பொன்மலர்
பொன்னம்மா
பொன்னி
மங்கை
மங்கையர்க்கரசி
மதிமலர்
மதியழகி
மண்டோதரி
மணவழகி
மணி
மணிமேகலை
மணியம்மை
மரகதம்
மரகதவல்லி
மல்லிகை
மலர்
மலர்க்கொடி
மலர்ச்செல்வி
மலர்மகள்
மலர்மங்கை
மலர்விழி
மலைமகள்
மலையரசி
மாசாத்தியார்
மாதவி

மாதேவி
மான்விழி
மீனாட்சி
முத்தமிழ்
முத்தழகி
முத்துவேணி
முல்லை
மெய்மொழி
மேகலை
யாழரசி
யாழினி
யாழ்நங்கை
வஞ்சி
வஞ்சிக்கொடி
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வண்டார்குழலி
வண்ணமதி
வள்ளி
வள்ளியம்மை
வளர்மதி
வாணி
வான்மதி

வாழ்க தமிழ். வாழ்க வையகம்



வாழ்க தமிழ். வாழ்க பாரதம்