இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரைவெட்டி)அரிய பயண அனுபவம் - நிறைவுப் பகுதி

பயணத்திட்டபடி நாலுமுக்கில் இருந்து 20 KM தூரமுள்ள குதிரைவெட்டியை நோக்கி புறபட்டோம், செல்லும் வழியெங்கும் தேயிலை தோட்டங்களும், தோட்ட தொழிலாளர் குடில்களும் நிறைந்திருந்தது, 12KM பயணத்திற்கு பிறகு ஊத்து என்ற இடத்தினை அடைந்தோம். நாலுமுக்கை போலவே ஊத்திலும் ஒரு சில மளிகை கடைகளையும் காய்கறி கடைகளையும் காண முடிந்தது. ஊத்திலிருந்து குதிரைவெட்டி செல்லும் அடர்ந்த காட்டு மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் சிங்கவால் குரங்குகளை கண்டோம்.

monkey

குதிரைவெட்டியை அடைந்த போது மாலை 5 மணியை நெருங்கியது    மலையுச்சியில் அடர்ந்த காட்டிற்கு அருகிலிருந்த வனத்துறை விடுதியொன்றில் தங்க ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்ததால், அங்கு சென்று சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம், குதிரைவெட்டியில் வனத்துறையினரால் கட்டப்பட்ட வாட்ச் டவர் ஒன்றும், வயர்லஸ் டவர் ஒன்றும் இருக்கிறது. வாட்ச் டவரிலிருந்து பார்த்தால் சுற்றி இல்ல மலைகளனைத்தும் தெரிந்தது மேலும் கரையார் , மணிமுத்தாறு ஆகிய அணைகளும் தெரிகிறது. சுற்றியிள்ள மலை பகுதிகளில் எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும் அதை எளிதில் கண்டறியும் வகையில் இந்த இடத்தில் வனத்துறையால் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

kuthirai vetti mountain குதிரைவெட்டி

திருநெல்வேலியிலிருந்து குதிரை வெட்டிக்கு அரசுப் பேருந்து 3 முறை வந்து செல்கிறது.இரவில் வனத்துறையினர் உதவியுடன் வனவிலங்குளை காண செல்லலாம்.  குதிரைவெட்டியில் நாங்கள் தங்கிய அந்த இரவு வன விலங்குகளின் சத்தங்களுக் கிடையே திக் திக் இரவாகவே சென்றது. கிளைமேட்டும் அருமையாக இருந்தது. மலையுச்சியிலிருந்து  மணிமுத்தாறு அணையினையும் கீழுள்ள சமவெளி பகுதிகளும் மனதை கவர்ந்தது.

OLYMPUS DIGITAL CAMERA         குதிரைவெட்டியிலிருந்து மணிமுத்தாறு அணையின் தோற்றம்

அடுத்தநாள்  காலையில் நலுமுக்கின் அருகிலிருக்கும் கோதையாறு அணையினை காணச் சென்றோம், கோதையாறு மேலணை கீழணை என இரண்டு அணைகள் மனதைகவர்ந்தன, இங்கு மின்சரவரியத்திற்கு சொந்தமான தாங்கும் விடுதியுள்ளது.

கோதையாறு அணை

மொத்தத்தில் இந்தப் பயணம் சென்னை போன்ற இயந்திர வாழ்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இனிய அனுபவமாக இருந்தது, பெரும்பாலான இடங்களில் செல்போன் டவர் கிடைக்க வில்லை எனவே செல்போன் தொல்லையிலிருந்தும் மீண்டு முழுமையான புத்துணர்வை அனுபவித்த எனது பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதிலே மிகுந்த மகிழ்ச்சி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) அரிய பயண அனுபவம் - பகுதி 2

முந்தைய பதிவில் மணிமுத்தாறு அருவி வரை வந்தாச்சு அடுத்து மஞ்சோலை பயணம்,முன்னர் சொன்னபடி மணிமுத்தாறு அருவியிலிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் குதிரை வெட்டி செல்வதற்கான அனுமதியை காண்பித்ததும் மேலே செல்ல வழி விட்டனர்.

இப்போது மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது, மழை நிற்கும் வரை காத்திருந்து பயணத்தை தொடர்ந்தோம். சாலையின் இருபுறமும் உயர்த்த மரங்களை காண முடிந்தது, எங்கள் வாகனம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தது.அருவியிலிருந்து 4KM தொலைவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்தது, அங்கிருந்து 20KM தொலைவில் மாஞ்சோலை எஸ்டேட் சோதனை சாவடியை அடைந்தோம்.

tiger reserveசோதனை சாவடியில் நுழைவுக்கட்டணம் RS40 செலுத்திவிட்டு பயணம் தொடர்ந்தது, மலைப்பாதையில் செல்லும்போது சாலையோரத்தில் கரடியொன்றை பார்த்தோம். மஞ்சோலை எஸ்டேட் ஆரம்பத்தில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் இயற்கை தாய் பச்சையாடையுடித்தி எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தால், மதிய நேரமும் வந்ததால் மான்ஜோலயிலுள்ள ஒரு உணவு விடுதியை கண்டுபித்தோம் ஆனால் அங்கு உணவு இல்லை, முன்பே தகவல் தந்தால் மட்டுமே உணவு கிடைக்குமாம்.அங்கிருந்த பேகரியில் கிடைத்த  பண்ணும் ஜாமும் வாங்கி எங்கள் பசியை தீர்த்தோம்.

manjolai tea estate1 மாஞ்சோலை எஸ்டேட்

மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களாக உள்ளது, தோட்ட தொழிலாளர்களின் தொகுப்பு வீடுகளை காண முடிந்தது, மேலும் ஒரு காவல் நிலையம், ரேசன் கடை போன்ற வசதிகளும்  தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இருக்கிறது. மாஞ்சோலையில் அடுத்து எங்கள் மனதை கவர்ந்த இடம் பட்சைபுல்வெளி நிறைந்த பின்வரும் படத்திலிருக்கும் இடம் ,

manjolai-greenary   

manjolai-greenary1

மான்ஜோலையை ரசித்த பிறகு அடுத்த எங்களது இலக்கான நாலுமுக்கு எனும் இடைத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அடர்ந்த காடுகளும் தேயிலை தோட்டங்களும் மாறி மாறி சாலையின் இருபுறமும் வந்து கண்களுக்கு விருந்து படைத்து.நாலுமுக்கின் ஆரம்பத்தில் தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று எங்களை அன்புடன் வரவேற்றது. நாலுமுக்கில் அன்று இரவு உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டுமென முன்பே அறிவுறுத்தப் பட்டிருந்ததால் அவற்றை வாங்கிக் கொண்டோம். இந்த இடத்தில் ஒரு மருத்துவமனையும் இருக்கிறது.

manjolai workers hut

குதிரை வெட்டி பயணம் மற்றும் திக் திக் இரவு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ...

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) ஒரு அரிய பயண அனுபவம்

குற்றாலம் செல்ல வேண்டுமென்று நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நெருங்கிய நண்பரிடமிருந்து குதிரை வெட்டி.  செங்கல் தேறி  சிறப்பினை தெரிந்துகொண்டோம் ஆனால் வனத்துறை அனுமதி பெற்றால்தான் இவ்விடங்களுக்கு செல்ல முடியும், வனத்துறை அனுமதியையும் அவரே பெற்று தந்ததால் எங்களது வேலை சுலபமானது . சென்னையில் இருந்து மாஞ்சோலை (குதிரை வெட்டி) மற்றும் செங்கல் தேறி ஆகிய இடங்களுக்கு செல்ல நெல்லை விரைவு வண்டியில் கிளம்பினோம்.

நெல்லையில் தவேரா வண்டியுடன் காந்திருந்த நண்பருடன் பயணத்தை துவங்கினோம்,நெல்லையில் இருந்து சுமார் 42KM தூரமுள்ள மணிமுத்தாறு அணையினை அடைந்தோம்.அங்குதான் வனத்துறை சோதனை சாவடிவுள்ளது, அங்கு அனுமதி பெற்று மலை பாதையினை ஏறத்துவங்கினோம்.

manimuthar dam        மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அணையிலிருந்து மலைப்பாதையில் 7KM பயணத்திற்கு பிறகு மணிமுத்தாறு அருவியினை அடைந்தோம்.மலைப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது, சாலையோர பலகையொன்று அதிகபட்சம் 30KM வேகம் என எச்சரித்தது ஆனால் இந்த சாலையில் 30KM வேகத்தில் கண்டிப்பாக செல்ல முடியாது. பாதையின் இருபுறமும் காய்ந்து போன மரங்களையே பார்க்க முடிந்தது.

Manimuthar falls மணிமுத்தாறு அருவி

(குற்றாலம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்த ஒரு நண்பர் இந்த அருவியை பார்த்தும் கொஞ்சம் திருப்தியடைந்தார்).குளிக்க தகுந்த அளவிலே தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஒரு மணி நேரம் ஆசை தீர குளித்து முடித்தோம்.குளிதுகொண்டிருக்கும் போதே சாரல் தூர ஆரம்பித்து குளிர் காற்று விசத் தொடங்கியது.இந்த அருவியில் மொத்தம் மூன்று இடங்களில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அருவியின் கீழே ஒரு தடாகம் அழகாக இருந்தது, 80M ஆழமுள்ள தடாகம் என்று எச்சரிக்கை பலகையொன்று இருந்தது.

அருவியில் அனந்த குளியல்

இந்த அருவி வரை வருவதற்கு பணம் செலுத்தி அனுமதி பெறலாம் எனவே கூட்டம் இருந்தது, மேலும் இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வருவதால் நம்பி வரலாம். அருவிக்கு எதிரே இருக்கும் கீழ்வரும் படத்திலுள்ள பாலத்தின் வழியாகத்தான் மாஞ்சோலை செல்ல வேண்டும். இந்த பாலத்தில் வனத்துறை தடுப்பு உள்ளது அவர்களிடம் மஞ்சோலை செல்ல வைத்திருந்த அனுமதி சீட்டை காண்பித்து மேற்கொண்டு பயணத்தை தொடங்கினோம் ...

Manimuthar bridge

மனதைகவரும் மாஞ்சோலை மலை பயணம் அடுத்த பகுதியில் தொடரும்

சனி, 27 ஜூன், 2009

இலவசமாக வீடியோ சாட்டிங் வசதி

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் வீடியோ கால்கள் என்பது சிறந்ததொரு தொடர்பு கருவியாக விளங்குகிறது, நீங்கள் இதன் வாயிலாக பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை காணவும் முடியும்.

ooVoo மற்றும் skype வாயிலாக நீங்கள் இந்த வசதிகளைப் பெறலாம். ooVoo free version மூலமாக நீங்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை ooVoo கணக்கு வைத்துள்ள உங்கள் நண்பர்களை கட்டணமின்றி தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 தொடர்புகளை ஏற்படுத்தும் வசதி உள்ளது சிறப்பம்சமாகும். உங்களது
வீடியோ சாட்டிங்கை பதிவு செய்யும் வசதியும் உள்ளது, மேலும் 25MB அளவுள்ள கோப்புகளையும் பரிமாறும் வசதி கூடுதல் சிறப்பாகும். இந்த வசதிகள் இலவசமாக
வழங்க படுவதால் விளம்பரதொல்லைகள் அதிகம் இருக்கும்.

oovoo

திங்கள், 8 ஜூன், 2009

வரலாற்று சாதனை படைத்தார் பெடரர்


13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரர் முதன் முறையாக நேற்று
முதன் முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்று தனது பிரெஞ்சு ஓபன் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்துள்ளார், சாம்ப்ராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெடரர் இந்த வெற்றியின் மூலம் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடாலிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து வந்த பெடரர் இந்தமுறை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராக திகழும் பெடரரின் இந்த வெற்றி அவரின் காத்திருத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும் , தன்னைபோன்ற சிறந்த வீரர்களுக்கே பிரெஞ்சு ஓபன் சிறந்த சவாலாக அமைந்தது அனாலும் 4 வருட கடின உழைப்பிருக்கு பிறகு இந்த வெற்றியை பெற்ற பெடரருக்கு வாழ்த்துக்கள்!

புதன், 3 ஜூன், 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே


சிங்களத் தீவினிலே சீரழிந்த எம்மக்கள்
சிதைந்து விட்ட அவர்தம் இருப்பிடங்கள்
புதைந்து விட்ட இளந்தளிர்கள்

சேதுவை மேடுருத்த இராமர் பாலம்தனை
இடிக்கையிலே - வெகுண்டெழுந்த பாரதமே
எங்களினமே அங்கு இல்லாதாகிவிடும்
நிலை தனிலே
கண்ணிருந்தும் குருடர்களாய்
செவியிருந்தும் செவிடர்களாய்
வாயிருந்தும் ஊமைகளாய்
வேடிக்கை பார்ப்பதுமேன் ?

எம்மக்கள் சொல்லொணா துயரத்தை
ஓட்டுக்கு அடகு வைத்த - கயவர்களை
காண்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே !

திங்கள், 1 ஜூன், 2009

பரிணாம வளர்ச்சி



மாதத்தின் மத்தியிலே மகத்தான மண விழாவாம்

மணப்பெண்ணாக வேண்டுமெனில் மாருதிகார் வேண்டுமாம்

மாருதி காரோடு அதை நிறுத்த ஒரு மாளிகையும் வேண்டுமாம்

மணமகனோ பெற்றோரின் விருப்பமென்று ஊமையானான்

பெண்ணை பெற்றவனோ தான் பெற்ற செல்வத்தை தாராளமாய்

விற்று முடித்து மணமுடித்தான்.


வருடங்கள் உருண்டன இன்று மணப்பெண்ணே மாமியாராய்

தன் மகனிற்கு மணப்பெண்ணை தேடுகிறார் பரிணாம வளர்ச்சியோடு

மாருதி காரில்லை ஹோண்டா அக்டிவா வேண்டுமாம்

இங்கேயும் மணமகன் பெற்றோரின் கீழ்படிந்தவேனே

இந்தப் பரிணாம வளர்ச்சி இருக்கும்வரை

வரதட்சணை வளருவதிலே வியப்பென்ன?

களிமண் தரை மன்னன் முடியிழந்தார் - பிரெஞ்சு ஓபன்



பிரெஞ்சு ஓபெனில் தான் விளையாடத்துவங்கிய 2005 முதல் சென்ற ஆண்டு வரை
முடி சூடா மன்னனாக விளங்கிய நடால் நேற்று நடை பெற்ற 2009 பிரெஞ்சு ஓபெனில் நான்காவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் பட்டம் வென்று தொடர்ந்து அயிந்தாவது முறையாக வென்று சாதனை புரிவார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி தனது 32 தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடால். (நம்ம தேர்தல் முடிவு போலவே ஆயிடுச்சு)

இந்த தோல்வியின் மூலம் ரோஜர் பெடரர் 14 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாம்ப்ராஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. பெடரர் இந்த ஆண்டு பட்டம் வென்றால் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 6 வது வீரர் என்ற சாதனை படைப்பார். இச்சாதனை புரிய பெடரரை வாழ்த்துவோம்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடால் " இந்த தோல்வி சோகமானதல்ல, என்றாவது ஒரு நாள் தோல்வியை சந்திக்க நேரிடும், தொடர் வெற்றிகளை பெறும்போது எப்படி அமைதியாக ஏற்றுக்கொண்டேனோ அதைப்போல இந்த தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென" தெரிவித்தார். நாமும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமிது.

புதன், 27 மே, 2009

சிகரம் - பகுதி 1

வெற்றியும் தோல்வியும் வாழ்கையில் இணைபிரியாதவை , இதில் தோல்வி பல மனிதர்களை துவண்டு விழ செய்கின்றது . தொடர் தோல்விதனை எப்படி ஏணிப் படிகளாக்குவது என்பதை தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு சிகரம் தொட்டவர்களைக் கொண்டு விளக்கும் தொடர் இது .
உலக பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் அனைவர் மனதிலும் நம்பிக்கை எனும் விதையை விதைத்திட ஒரு சிறு முயற்ச்சி,

ஜெ கே ரோவ்லிங்
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் நூலின் ஆசிரியை ஜெ கே ரோவ்லிங் அவர்களின் சிகரம் தொட்ட கதை .

1993 ஆண்டு டிசம்பர் மாதம் உலகே கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிய நேரம்
ரோவ்லிங் மட்டும் சோகத்தில் ,சென்ற மாதத்தில்தான் விவாகரதுப்பெற்று தனது மகளுடன் ஸ்காட்லாந்து எடின்பரோ நகரில் தஞ்சமடைந்திருந்தார் ரோவ்லிங்.

தன்னையும் தனது மகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேலைக்கு செல்ல வேண்டிய கட்டயத்திலே ரோவ்லிங், தனக்கு தெரிந்த அச்சிரியப்பணிக்கு செல்ல கூட கல்விச்சான்றிதல் இல்லை எதிர்காலம் கேள்விக்குறியாக ரோவ்லிங் முன்பு நின்றது. இந்த சோதனையை சாதனையாக்க அவரிடம் இருந்தது அவருடைய சிந்தனை , ஆம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது மனக்கண்ணில் கண்ட ஹாரி பாட்டர் கதையின் துவக்கமாக ஆனது.

தனது சிறுகுழந்தையை பூங்காவிற்கு அழைத்து சென்று தூங்கவைத்து தனது புத்தகத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் ரோவ்லிங் நோட்டில் எழுதிய கதைக்கு தனது வீட்டில் இருந்த பழைய டைப் ரைட்டிங் மெஷின் மூலம் எழுத்து வடிவம் கொடுத்தார் , அருகில் இருந்த கல்லூரியின் உதவியால் முழூ வடிவம் பெற்றது ஹாரி பாட்டர் முதலாம் பாகம் . இப்போது புத்தகத்தை விற்க வேண்டிய சோதனை ரோவ்லிங் முன்னால் . தனது தொடர் உழைப்பினால் 1 ஆண்டிற்கு பிறகு Bloomsbury என்ற நிறுவனம் சுமார் $4,000 விலைக்கு அந்த புத்தகத்தை வாங்கியது . அந்த புத்தகம் மக்கள் மத்தியிலே சிறுக சிறுக பிரபலம் அடைந்தது .

பள்ளியில் ஆசிரியப்பணி செய்து கொண்டே அடுத்த பாகத்தை ( Harry Potter and the Chamber of Secrets) , எழுதினார் இந்தப்புத்தகம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பெரிய வரவேற்ப்பை பெற்று ஜெ கே ரோவ்லிங் உலகப் புகழ் பெற அடிகோலியது .

ஹாரி பாட்டர் தொடரின் நான்காம் பாகம் (HarryPotter and the Goblet of Fire) வரலாற்றில் மிக விரைவில் விற்று தீர்ந்தது . இப்புத்தகம் முதல் பதிப்பில் சுமார் 5.3 மில்லியன் வெளியானது , மேலும் சுமார் 1.8 மில்லியன் பிரதிகள் முன்பதிவு செய்யபட்டிருந்தது . அடுத்தடுத்து வந்த எல்லா பாகங்களும் முந்தைய சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்தது .

2006 ஆண்டு இறுதியிலே ஹாரி பாட்டர் தொடரின் 6 பாகங்கள் சுமார் 90 மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்து உலக பெரும் பணக்காரர்களின் வரிசையில் ஜெ கே ரோவ்லிங்கை இடம் பெற செய்தது .

தனது சோகங்களை சாதிப்பதற்கு உரமாக்கிய இம்மங்கையின் மன உறுதி நமக்குமிருந்தால் சிகரம் கூட தொட்டுவிடும் தூரத்திலே !.

செவ்வாய், 26 மே, 2009

இரண்டாம் உலகப்போர் அரிய புகைப்படங்கள் பகுதி 2 - exclusive

உலகப்போர் அரிய புகைப்படங்கள் பகுதி 2
பகுதி 1 கிடைத்த நல்லாதரவை தொடர்ந்து அடுத்த பகுதி உங்களுக்காக

சேதமடைந்த கட்டடங்கள்
ஒரு படையினரின் பயணம்
உணவிற்கு திண்டாட்டம்
சேதமடைந்த போர் விமானம்
களைப்பாறும் போர் வீரர்கள்
ஒரு படையினரின் நடை பயணம் ஒரு படையினரின் பயணம்














புதன், 20 மே, 2009

இமயத்தில் இரு நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இரண்டாம் உலகப்போர் அரிய புகைப்படங்கள் - exclusive

இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு










திங்கள், 18 மே, 2009

நிலையான இந்திய அரசு, சரியான மக்கள் தீர்ப்பு

உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இந்திய மக்கள் நிலையான அரசினை தேர்வு செய்து சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பினை உண்டாக்கி வரும் இச்சூழலில் நிலையான ஒரு அரசு நமக்கு கண்டிப்பாக தேவை.

பாஜகவின் பரிதாப நிலை

வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் பிரதம வேட்பாளர்களாக இல்லாததும் அத்வானி, மோடி இடையே நடந்த அதிகாரத்திற்கான போட்டி தமிழகம், ஆந்திர போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி இல்லாமை போன்றவையே பாஜகவின் தோல்விக்கு காரணங்கள்.

தமிழக மக்களின் சிறந்த தெரிவு

கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழகம், ஆந்திர முடிவுகள் மத்திய அரசினை முடிவு செய்யும் விதமாக இருந்தது மேலும் உபி, கேரளம் மற்றும் மேற்கு வாங்க மாநில முடிவுகள் காங்கிரசை பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தியுள்ளது.

இலங்கை பிரச்சனை

அதிமுக கூட்டணி இலங்கை பிரச்சனையை பிரதானமாக கையாண்டது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்கள் பற்றி இம்மியளவும் எண்ணிப்பார்க்காத அதிமுக தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க எனக்கு ஓட்டு போடுங்கள் என்றது அவர்கள் சிறந்த நடிகை என்பதை மக்களிடம் காட்டியது, யோசித்து பாருங்கள் வலையுலக நண்பர்களே வைகோ எதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்? இலங்கை தமிழர்கள் பற்றி பேசி தானே,ஆக இவர்கள் ஓட்டு வாங்க சொன்ன பொய் அவர்களுக்கே எதிராக முடிந்தது. விலைவாசி உயர்வு, மின்தடை போன்ற முக்கிய பிரச்சனைகளை நாயகர்கள் ஆக்கியிருந்தால் வெற்றி பெற உதவி இருக்கும்.

மண்ணை கவ்விய மதிமுக பாமக

சேது சமுத்திர திட்டத்தினை தமிழகத்திற்கு பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திமுக அணியிலிருந்து 2004 ஓட்டு கேட்ட வைகோ 2009 தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தினை செய்யல்படுத்தாது தடுக்கும் தலைவியின் பின்னால். சென்ற சட்டமன்ற தேர்தலிலே எடுபடாத குடும்ப அரசியல் என்ற வாதம்,சென்ற சட்டமன்ற தேர்தலிலே பாமகவைவிட குறைந்த இடங்களே தந்ததால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோ இம்முறை தன்மானத்தை தானை தலைவியிடம் அடகு வைத்து விட்டாரா? வைகோவை தோற்கடித்துள்ளனர் தமிழக மக்கள்.

ஒரு சதவிகித வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி பதவி சுகம் கண்டு வந்த நரியின் சாயத்தை வெளுக்க வைத்த தமிழக மக்கள் வாழ்க.இனியாவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் பாமக போன்றவர்களை புறந்தள்ள வேண்டும்.

வளர்ந்துவரும் தேமுதிக

2004 சட்டமன்ற தேர்தலிலே 8.5% இந்த தேர்தலிலே 10% வாக்குகளை தனித்து நின்று தமிழக நின்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது தேமுதிக.


மொத்தத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை எங்களின் இதயத்தை துளைத்தாலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இதயம் கனத்தாலும் இந்தியாவிற்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு வக்களித்திட எம் தமிழக மக்கள் சிறந்த மதிநுட்பம் கொண்டோர் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர்


பராசக்தி

வெள்ளி, 8 மே, 2009

கத்திரி வெயிலில் குளுமை

நம்ம சென்னைல கத்திரி வெயில் தங்க முடியல . இத ஒன்னும் பண்ண முடியாது கண்ணுக்கு குளுர்ச்சியா படத்தையாவது வாங்க பார்ப்போம்







வியாழன், 7 மே, 2009

இக்கால மனிதனின் குகை

ஆதி மனிதனைப்போல் குகையில் வசிக்க ஆசையா உள்ளே வாருங்கள்