இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரைவெட்டி)அரிய பயண அனுபவம் - நிறைவுப் பகுதி

பயணத்திட்டபடி நாலுமுக்கில் இருந்து 20 KM தூரமுள்ள குதிரைவெட்டியை நோக்கி புறபட்டோம், செல்லும் வழியெங்கும் தேயிலை தோட்டங்களும், தோட்ட தொழிலாளர் குடில்களும் நிறைந்திருந்தது, 12KM பயணத்திற்கு பிறகு ஊத்து என்ற இடத்தினை அடைந்தோம். நாலுமுக்கை போலவே ஊத்திலும் ஒரு சில மளிகை கடைகளையும் காய்கறி கடைகளையும் காண முடிந்தது. ஊத்திலிருந்து குதிரைவெட்டி செல்லும் அடர்ந்த காட்டு மலைப்பாதையில் வாகனம் சென்று கொண்டிருந்தது. செல்லும் வழியில் சிங்கவால் குரங்குகளை கண்டோம்.

monkey

குதிரைவெட்டியை அடைந்த போது மாலை 5 மணியை நெருங்கியது    மலையுச்சியில் அடர்ந்த காட்டிற்கு அருகிலிருந்த வனத்துறை விடுதியொன்றில் தங்க ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்ததால், அங்கு சென்று சிறுது நேரம் ஓய்வு எடுத்தோம், குதிரைவெட்டியில் வனத்துறையினரால் கட்டப்பட்ட வாட்ச் டவர் ஒன்றும், வயர்லஸ் டவர் ஒன்றும் இருக்கிறது. வாட்ச் டவரிலிருந்து பார்த்தால் சுற்றி இல்ல மலைகளனைத்தும் தெரிந்தது மேலும் கரையார் , மணிமுத்தாறு ஆகிய அணைகளும் தெரிகிறது. சுற்றியிள்ள மலை பகுதிகளில் எங்கு காட்டு தீ ஏற்பட்டாலும் அதை எளிதில் கண்டறியும் வகையில் இந்த இடத்தில் வனத்துறையால் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

kuthirai vetti mountain குதிரைவெட்டி

திருநெல்வேலியிலிருந்து குதிரை வெட்டிக்கு அரசுப் பேருந்து 3 முறை வந்து செல்கிறது.இரவில் வனத்துறையினர் உதவியுடன் வனவிலங்குளை காண செல்லலாம்.  குதிரைவெட்டியில் நாங்கள் தங்கிய அந்த இரவு வன விலங்குகளின் சத்தங்களுக் கிடையே திக் திக் இரவாகவே சென்றது. கிளைமேட்டும் அருமையாக இருந்தது. மலையுச்சியிலிருந்து  மணிமுத்தாறு அணையினையும் கீழுள்ள சமவெளி பகுதிகளும் மனதை கவர்ந்தது.

OLYMPUS DIGITAL CAMERA         குதிரைவெட்டியிலிருந்து மணிமுத்தாறு அணையின் தோற்றம்

அடுத்தநாள்  காலையில் நலுமுக்கின் அருகிலிருக்கும் கோதையாறு அணையினை காணச் சென்றோம், கோதையாறு மேலணை கீழணை என இரண்டு அணைகள் மனதைகவர்ந்தன, இங்கு மின்சரவரியத்திற்கு சொந்தமான தாங்கும் விடுதியுள்ளது.

கோதையாறு அணை

மொத்தத்தில் இந்தப் பயணம் சென்னை போன்ற இயந்திர வாழ்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு இனிய அனுபவமாக இருந்தது, பெரும்பாலான இடங்களில் செல்போன் டவர் கிடைக்க வில்லை எனவே செல்போன் தொல்லையிலிருந்தும் மீண்டு முழுமையான புத்துணர்வை அனுபவித்த எனது பயண அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதிலே மிகுந்த மகிழ்ச்சி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) அரிய பயண அனுபவம் - பகுதி 2

முந்தைய பதிவில் மணிமுத்தாறு அருவி வரை வந்தாச்சு அடுத்து மஞ்சோலை பயணம்,முன்னர் சொன்னபடி மணிமுத்தாறு அருவியிலிருந்த வனத்துறை அதிகாரிகளிடம் குதிரை வெட்டி செல்வதற்கான அனுமதியை காண்பித்ததும் மேலே செல்ல வழி விட்டனர்.

இப்போது மழை பெரிதாக பெய்ய ஆரம்பித்தது, மழை நிற்கும் வரை காத்திருந்து பயணத்தை தொடர்ந்தோம். சாலையின் இருபுறமும் உயர்த்த மரங்களை காண முடிந்தது, எங்கள் வாகனம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தது.அருவியிலிருந்து 4KM தொலைவில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் வந்தது, அங்கிருந்து 20KM தொலைவில் மாஞ்சோலை எஸ்டேட் சோதனை சாவடியை அடைந்தோம்.

tiger reserveசோதனை சாவடியில் நுழைவுக்கட்டணம் RS40 செலுத்திவிட்டு பயணம் தொடர்ந்தது, மலைப்பாதையில் செல்லும்போது சாலையோரத்தில் கரடியொன்றை பார்த்தோம். மஞ்சோலை எஸ்டேட் ஆரம்பத்தில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் இயற்கை தாய் பச்சையாடையுடித்தி எங்கள் கண்களுக்கு விருந்து படைத்தால், மதிய நேரமும் வந்ததால் மான்ஜோலயிலுள்ள ஒரு உணவு விடுதியை கண்டுபித்தோம் ஆனால் அங்கு உணவு இல்லை, முன்பே தகவல் தந்தால் மட்டுமே உணவு கிடைக்குமாம்.அங்கிருந்த பேகரியில் கிடைத்த  பண்ணும் ஜாமும் வாங்கி எங்கள் பசியை தீர்த்தோம்.

manjolai tea estate1 மாஞ்சோலை எஸ்டேட்

மாஞ்சோலையில் எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களாக உள்ளது, தோட்ட தொழிலாளர்களின் தொகுப்பு வீடுகளை காண முடிந்தது, மேலும் ஒரு காவல் நிலையம், ரேசன் கடை போன்ற வசதிகளும்  தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இருக்கிறது. மாஞ்சோலையில் அடுத்து எங்கள் மனதை கவர்ந்த இடம் பட்சைபுல்வெளி நிறைந்த பின்வரும் படத்திலிருக்கும் இடம் ,

manjolai-greenary   

manjolai-greenary1

மான்ஜோலையை ரசித்த பிறகு அடுத்த எங்களது இலக்கான நாலுமுக்கு எனும் இடைத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அடர்ந்த காடுகளும் தேயிலை தோட்டங்களும் மாறி மாறி சாலையின் இருபுறமும் வந்து கண்களுக்கு விருந்து படைத்து.நாலுமுக்கின் ஆரம்பத்தில் தேயிலை தூள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று எங்களை அன்புடன் வரவேற்றது. நாலுமுக்கில் அன்று இரவு உணவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டுமென முன்பே அறிவுறுத்தப் பட்டிருந்ததால் அவற்றை வாங்கிக் கொண்டோம். இந்த இடத்தில் ஒரு மருத்துவமனையும் இருக்கிறது.

manjolai workers hut

குதிரை வெட்டி பயணம் மற்றும் திக் திக் இரவு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ...

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

மாஞ்சோலை (குதிரை வெட்டி) ஒரு அரிய பயண அனுபவம்

குற்றாலம் செல்ல வேண்டுமென்று நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நெருங்கிய நண்பரிடமிருந்து குதிரை வெட்டி.  செங்கல் தேறி  சிறப்பினை தெரிந்துகொண்டோம் ஆனால் வனத்துறை அனுமதி பெற்றால்தான் இவ்விடங்களுக்கு செல்ல முடியும், வனத்துறை அனுமதியையும் அவரே பெற்று தந்ததால் எங்களது வேலை சுலபமானது . சென்னையில் இருந்து மாஞ்சோலை (குதிரை வெட்டி) மற்றும் செங்கல் தேறி ஆகிய இடங்களுக்கு செல்ல நெல்லை விரைவு வண்டியில் கிளம்பினோம்.

நெல்லையில் தவேரா வண்டியுடன் காந்திருந்த நண்பருடன் பயணத்தை துவங்கினோம்,நெல்லையில் இருந்து சுமார் 42KM தூரமுள்ள மணிமுத்தாறு அணையினை அடைந்தோம்.அங்குதான் வனத்துறை சோதனை சாவடிவுள்ளது, அங்கு அனுமதி பெற்று மலை பாதையினை ஏறத்துவங்கினோம்.

manimuthar dam        மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அணையிலிருந்து மலைப்பாதையில் 7KM பயணத்திற்கு பிறகு மணிமுத்தாறு அருவியினை அடைந்தோம்.மலைப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது, சாலையோர பலகையொன்று அதிகபட்சம் 30KM வேகம் என எச்சரித்தது ஆனால் இந்த சாலையில் 30KM வேகத்தில் கண்டிப்பாக செல்ல முடியாது. பாதையின் இருபுறமும் காய்ந்து போன மரங்களையே பார்க்க முடிந்தது.

Manimuthar falls மணிமுத்தாறு அருவி

(குற்றாலம் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்த ஒரு நண்பர் இந்த அருவியை பார்த்தும் கொஞ்சம் திருப்தியடைந்தார்).குளிக்க தகுந்த அளவிலே தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஒரு மணி நேரம் ஆசை தீர குளித்து முடித்தோம்.குளிதுகொண்டிருக்கும் போதே சாரல் தூர ஆரம்பித்து குளிர் காற்று விசத் தொடங்கியது.இந்த அருவியில் மொத்தம் மூன்று இடங்களில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அருவியின் கீழே ஒரு தடாகம் அழகாக இருந்தது, 80M ஆழமுள்ள தடாகம் என்று எச்சரிக்கை பலகையொன்று இருந்தது.

அருவியில் அனந்த குளியல்

இந்த அருவி வரை வருவதற்கு பணம் செலுத்தி அனுமதி பெறலாம் எனவே கூட்டம் இருந்தது, மேலும் இந்த அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வருவதால் நம்பி வரலாம். அருவிக்கு எதிரே இருக்கும் கீழ்வரும் படத்திலுள்ள பாலத்தின் வழியாகத்தான் மாஞ்சோலை செல்ல வேண்டும். இந்த பாலத்தில் வனத்துறை தடுப்பு உள்ளது அவர்களிடம் மஞ்சோலை செல்ல வைத்திருந்த அனுமதி சீட்டை காண்பித்து மேற்கொண்டு பயணத்தை தொடங்கினோம் ...

Manimuthar bridge

மனதைகவரும் மாஞ்சோலை மலை பயணம் அடுத்த பகுதியில் தொடரும்