
சிங்களத் தீவினிலே சீரழிந்த எம்மக்கள்
சிதைந்து விட்ட அவர்தம் இருப்பிடங்கள்
புதைந்து விட்ட இளந்தளிர்கள்
சேதுவை மேடுருத்த இராமர் பாலம்தனை
இடிக்கையிலே - வெகுண்டெழுந்த பாரதமே
எங்களினமே அங்கு இல்லாதாகிவிடும்
நிலை தனிலே
கண்ணிருந்தும் குருடர்களாய்
செவியிருந்தும் செவிடர்களாய்
வாயிருந்தும் ஊமைகளாய்
வேடிக்கை பார்ப்பதுமேன் ?
எம்மக்கள் சொல்லொணா துயரத்தை
ஓட்டுக்கு அடகு வைத்த - கயவர்களை
காண்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக